
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக தீர்த்தவாரி மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவிலில்களில் விழாக்களை விமர்சையாக கொண்டாட இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளதால் நாளை (17-ந் தேதி) மகாளய அமாவாசையொட்டி காசிவிஸ்வநாதர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.