search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா
    X

    அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா

    அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 8-ந் தேதி பத்ரகாளியம்மனுக்கு பூர்வாங்க அபிஷேகம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு, பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லாக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு இன்னிசை கச்சேரிகளும் நடைப்பெற்றது.

    விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் ராமலிங்கம், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் காமராஜ், உறுப்பினர் அய்யாசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று பகல் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    Next Story
    ×