என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது
Byமாலை மலர்13 Dec 2018 8:38 AM GMT (Updated: 13 Dec 2018 8:38 AM GMT)
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (14-ந் தேதி) கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இந்த வருடத்தின் 3-வது வலியபடுக்கை பூஜை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மாசிக் கொடை 10 நாட்கள் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.
இங்கு தினமும் நடக்கும் பொங்கல் மற்றும் வெடி வழிபாட்டை அடுத்து ஆண்டிற்கு 3 முறை நடக்கும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது.
இந்த பூஜையின்போது நள்ளிரவு அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், உணவு பதார்த்தங்களை அம்மன் முன் பெரும் படையலாக படைத்து அம்மனை வழிபடுவதாகும்.
இது மாசிக் கொடையின் 6-ம் நாள் பரணிக்கொடை மற்றும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் நடக்கும்.
நாளை (14-ந் தேதி) கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இந்த வருடத்தின் 3-வது வலியபடுக்கை பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 4 மணிக்கு திருநடை திறக்கப்படுகிறது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் உச்சபூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாள பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் வலியபடுக்கை பூஜை ஆகியவை நடக்கிறது. பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து அம்மனை வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு தினமும் நடக்கும் பொங்கல் மற்றும் வெடி வழிபாட்டை அடுத்து ஆண்டிற்கு 3 முறை நடக்கும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது.
இந்த பூஜையின்போது நள்ளிரவு அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், உணவு பதார்த்தங்களை அம்மன் முன் பெரும் படையலாக படைத்து அம்மனை வழிபடுவதாகும்.
இது மாசிக் கொடையின் 6-ம் நாள் பரணிக்கொடை மற்றும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் நடக்கும்.
நாளை (14-ந் தேதி) கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இந்த வருடத்தின் 3-வது வலியபடுக்கை பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 4 மணிக்கு திருநடை திறக்கப்படுகிறது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் உச்சபூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாள பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் வலியபடுக்கை பூஜை ஆகியவை நடக்கிறது. பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து அம்மனை வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X