என் மலர்
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கபெருமாள் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கார்த்திகை மாதத்தில் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். குறிப்பாக வைணவ கோவில்களில் இந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ர தீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கபெருமாள் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு நேற்று நடந்தது.
சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்கு களை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் மாருதி நண்பர்கள் குழுவினர் செய்து இருந்தனர்.
சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்கு களை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் மாருதி நண்பர்கள் குழுவினர் செய்து இருந்தனர்.
Next Story






