என் மலர்
ஆன்மிகம்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை
நடராஜ பெருமானுக்கு சதயம், திருவாதிரை உள்ளிட்ட 6 நட்சத்திர நாளன்று சிறப்பு பூஜை, அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி சதயம் நட்சத்திர நாளான நேற்று நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. நடராஜ பெருமானுக்கு சதயம், திருவாதிரை உள்ளிட்ட 6 நட்சத்திர நாளன்று சிறப்பு பூஜை, அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி சதயம் நட்சத்திர நாளான நேற்று மாலை 4.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக நடராஜர் சன்னதியில் விநாயகர் பூஜை, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. அதையடுத்து 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக நடராஜர் சன்னதியில் விநாயகர் பூஜை, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. அதையடுத்து 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






