search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    எந்த விரதத்தை கடைப்பிடித்தால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்...
    X

    எந்த விரதத்தை கடைப்பிடித்தால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்...

    • விரதங்கள் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
    • எந்த விரதத்தை கடைப்பிடித்தால், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

    பொதுவாக நம்மில் பலரும் விரதங்கள் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த விரதத்தை கடைப்பிடித்தால், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

    சங்கடஹர சதுர்த்தி:- தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்.

    விநாயக சதுர்த்தி:- வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகரின் பூரணமான அருள் கிட்டும்.

    சரவண விரதம்:- குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி, ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.

    சஷ்டி விரதம்:- மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்.

    வைகுண்ட ஏகாதசி:- குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.

    கோகுலாஷ்டமி விரதம்:- மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

    கவுரி விரதம்:- குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும்.

    வரலட்சுமி விரதம்:- மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.

    பிரதோஷ விரதம்:- மன அமைதி கிடைத்திடும், நீண்ட ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.

    மகா சிவராத்திரி:- சிவபெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    வைகாசி விசாகம்:- நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்கப் பெறுவர்.

    நவராத்திரி விரதம்:- மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

    அமாவாசை விரதம்:- பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.

    பவுர்ணமி விரதம்:- வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.

    கார்த்திகை விரதம்:- எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

    Next Story
    ×