search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துர்க்கை அம்மன்
    X
    துர்க்கை அம்மன்

    திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் விரதம்

    திருமண வாழ்க்கையில் பிரச்சினையை காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற விரதம் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30-12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும்.
    நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு வழிபாட்டை விரதம் இருந்து செய்து வந்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.. திருமணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்து ஞாயிறுதோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.

    திருமண வாழ்க்கையில் பிரச்சினையை காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற விரதம் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30-12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.

    திருமண வரம் கூடிவந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதே போல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சினை தீர்ந்தவுடன் அரக்குக் கலர் பட்டு பாவாடை சாற்றலாம்.
    Next Story
    ×