என் மலர்
ஆன்மிகம்

ஆன்மிகத்தில் நுழைவதற்கான முதல் படி
இறைப்பணிக்கு ஏசு வருவதற்கு முன்பே மனிதர்களுக்கு வந்த முதல் அழைப்பு மனந்திரும்புவதற்காகத்தான்.
உலக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அடுத்த நிலைக்குச் செல்வதற்கென்று காலகட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பள்ளிப்படிப்பு, கல்லூரிக்கல்வி, திருமண வாழ்க்கை போன்றவற்றுக்கு வயது, மனது ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதில் குறைவுடையவர்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் அதற்கேற்ற பிரச்சினைகள் எழுவதை தவிர்க்க முடியாது.
ஆன்மிகத்திலும் இதே நிலை உண்டு. முக்கிய நபர்களை சந்திக்கச் செல்வதற்கு முன்பு, அலங்காரம் போன்ற உடல் ரீதியான அம்சங்களிலும், எதுபற்றி பேச இருக்கிறோமோ அதுபற்றி மனரீதியாகவும் நாம் தயார்படுத்த வேண்டியதுள்ளது. அதுபோல இறைவனை நெருங்க விரும்புகிறவர்களும் தயார் நிலையை அடைய வேண்டியது அவசியம்.
இறைவன் நோக்குவது உடலையல்ல, மனிதனின் மனதை மட்டுமே. இவ்வளவு காலம் உலகம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு, தன்னை நோக்கி வர விரும்பும் மனிதன், அதற் காகத் தன்னை எந்த விதத்தில் எல்லாம் தயார்படுத்தி இருக்கிறான் என்பதை உற்றுநோக்குகிறார்.
ஆன்மிக வாழ்க்கையை வாழ முடிவு செய்த பிறகு, முந்தைய வாழ்க்கை நிலையை தன்னிடம் இருந்து முற்றிலும் அப்புறப்படுத்துவதற்கு அவன் மேற்கொள்ளும் உண்மையான உறுதிதான், இறைவன் விரும்பும் அம்சமாக உள்ளது. இதை வேதம் ‘மனம்திரும்புதல்’ என்று குறிப்பிடுகிறது. இந்த மனந்திரும்புதல்தான் ஆன்மிக வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கிறது.
மனந்திரும்புதல் என்பது, உடலளவில் செய்யும் ஏதோ சில கெட்ட பழக்கங்களை மட்டும் விட்டுவிடுதல் என்பதல்ல. 3 நிலைகளில் இருந்து மனந்திரும்புதல் நடந்தாக வேண்டும்.
முதலாவது உடலளவில், அதாவது கண், செவி, வாய் உள்ளிட்ட அவயங்கள் மூலம் செய்யப்படும் பாவங்களை நிறுத்த முன்வர வேண்டும்.
இரண்டாவதாக, உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள் என்று வேதத்தில் சொல்லப்படும், பொல்லாத சிந்தனைகள், கபடு, பெருமை போன்ற (மாற்கு 7;20,23) அனைத்தையும் வாழ்க்கையில் இருந்து அகற்றுவதற்கு உறுதி அளிக்க வேண்டும்.
மூன்றாவதாக, கோபம், எரிச்சல், குறைகூறுதல் உட்பட பல்வேறு ‘ஜென்ம சுபாவங்கள்’ என்று அழைக்கப்படும் பிறவிக்குணங்களில் (1 கொரி.2;14) இருந்து விலக உறுதி அளிக்க வேண்டும்.
இந்த 3 வகையான பாவங்களிலும் இருந்து விலக முன்வர முடிவு செய்வதே, அதாவது மனந்திரும்புவதே ஆன்மிக வாழ்க்கையில் நுழைவதற்கான முதல்படியாக இருக்கிறது. இதில் ஒன்று குறைந்தாலும் மனந்திரும்புதலில் முழுமை இருக்காது. பிற்காலத்தில் மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
இறைப்பணிக்கு ஏசு வருவதற்கு முன்பே மனிதர்களுக்கு வந்த முதல் அழைப்பு மனந்திரும்புவதற்காகத்தான். யோவான் ஸ்நானன் மூலம் அந்த அழைப்பை இறைவன் விடுத்தார்.
‘மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், பாதைகளை செவ்வை பண்ணுங்கள்’ என்றெல்லாம் அவன் அழைப்பு விடுத்தான் (மத்.3).
அதாவது, ஏசு என்ற இறைமகன் வருகிறார். அவர் உன்னிடத்தில் வர வேண்டும் என்றாலும், அல்லது நீ அவரிடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும், மேற்கூறப்பட்ட 3 நிலைகளிலும் இருந்து மனந்திரும்புதல் என்ற ஒரே செயல்தான், இருவருக்கும் இடையே வழியை ஆயத்தம் செய்து கொடுக்கும். அப்படி, கடவுள் (கடந்து உள்ளே வருபவர்) உனது உள்ளத்துக்குள் வந்த பிறகு, உனது ஆத்துமா, பரலோக ராஜ்யத்தில் உள்ளதுபோல செழித்துவிடும் (உலக செழிப்பு வேறு, பரலோக செழிப்பு வேறு). மனந்திரும்பிவிட்டால், அந்த செழிப்பு மிக அருகில் வந்துவிடும் என்பதையே அந்த வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பரலோக ராஜ்யத்தின் நிலை என்ன என்று கேட்டால், முதலில் அங்கு பாவம் கிடையாது. எனவே அங்கு தண்டனை, நிம்மதி இழப்பு போன்ற பாவத்தின் பிரதிபலனான துன்பங்கள் கிடையாது. உண்மையான மனந்திரும்புதலை அடைந்தால், உலகத்தில் வாழும் வாழ்க்கையிலேயே அதுபோன்ற ஒரு நிம்மதியான வாழ்வை (உலக செழிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும்) அடையலாம்.
இந்த உலகத்தில் ஒரு ராஜ்யத்தை ஒரு அரசன் அமைக்கும்போது, வெளியில் இருந்து செயல்படும் எதிரிகளின் நெருக்கடி, உள்ளே இருந்துகொண்டே செயல்படும் விரோதிகளின் போராட்டம் என பன்முனைத் தாக்குதலை எதிர்கொண்டாக வேண்டும். அது போலத்தான் பரலோக ராஜ்யத்தை பக்தனுக்குள் இறைவன் அமைக்கும்போதும் இதே போராட்டம் உண்டு.
வெளியில் இருந்து நெருக்கடி கொடுக்கும் பொருளாசை, இச்சை போன்ற பாவங்கள்; உள்ளே இருந்துகொண்டு பாவங்களைச் செய்யத்தூண்டும் ஜென்ம சுபாவங்கள் என பல முனைகளில் இருந்து தாக்கும் பாவங்களால் கறைபட்டு விடாதபடி, எதிர்த்து போராடியே இறையரசை உள்ளத்தில் அமைக்க முடியும்.
சந்தர்ப்பங்களின்போது, அநியாய ஆசைக்கும், சுபாவத்துக்கும் உட்படாமல், அதைவிட்டு விலகுவதற்கு முழு மனதோடு பக்தன் போராடினால், அப்போது அவனுக்குத் துணையாக இறைவன் வந்து, பலத்தைத் தந்து, அந்த பாவத்தை ஜெயிக்கச் செய்வார். இப்படி பாவங்களை துரத்தியடித்து வெற்றிபெற்றவனே இதயத்தில் பரலோக ராஜ்யம் என்ற இறையரசு அமையப்பெற்றவனாகிறான்.
இப்படிப்பட்ட இறையரசு அமையப்பெற்றவன், எல்லா நிலையிலும் அமைதியாகவும், தன்னைச் சார்ந்தவர்களிடத்தில் எல்லா நிலைகளிலும் சாந்தத்தை பிரதிபலிப்பவனாகவுமே இருப்பான். நாம் எதை பிரதிபலிக்கிறோம்?
ஆன்மிகத்திலும் இதே நிலை உண்டு. முக்கிய நபர்களை சந்திக்கச் செல்வதற்கு முன்பு, அலங்காரம் போன்ற உடல் ரீதியான அம்சங்களிலும், எதுபற்றி பேச இருக்கிறோமோ அதுபற்றி மனரீதியாகவும் நாம் தயார்படுத்த வேண்டியதுள்ளது. அதுபோல இறைவனை நெருங்க விரும்புகிறவர்களும் தயார் நிலையை அடைய வேண்டியது அவசியம்.
இறைவன் நோக்குவது உடலையல்ல, மனிதனின் மனதை மட்டுமே. இவ்வளவு காலம் உலகம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு, தன்னை நோக்கி வர விரும்பும் மனிதன், அதற் காகத் தன்னை எந்த விதத்தில் எல்லாம் தயார்படுத்தி இருக்கிறான் என்பதை உற்றுநோக்குகிறார்.
ஆன்மிக வாழ்க்கையை வாழ முடிவு செய்த பிறகு, முந்தைய வாழ்க்கை நிலையை தன்னிடம் இருந்து முற்றிலும் அப்புறப்படுத்துவதற்கு அவன் மேற்கொள்ளும் உண்மையான உறுதிதான், இறைவன் விரும்பும் அம்சமாக உள்ளது. இதை வேதம் ‘மனம்திரும்புதல்’ என்று குறிப்பிடுகிறது. இந்த மனந்திரும்புதல்தான் ஆன்மிக வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கிறது.
மனந்திரும்புதல் என்பது, உடலளவில் செய்யும் ஏதோ சில கெட்ட பழக்கங்களை மட்டும் விட்டுவிடுதல் என்பதல்ல. 3 நிலைகளில் இருந்து மனந்திரும்புதல் நடந்தாக வேண்டும்.
முதலாவது உடலளவில், அதாவது கண், செவி, வாய் உள்ளிட்ட அவயங்கள் மூலம் செய்யப்படும் பாவங்களை நிறுத்த முன்வர வேண்டும்.
இரண்டாவதாக, உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள் என்று வேதத்தில் சொல்லப்படும், பொல்லாத சிந்தனைகள், கபடு, பெருமை போன்ற (மாற்கு 7;20,23) அனைத்தையும் வாழ்க்கையில் இருந்து அகற்றுவதற்கு உறுதி அளிக்க வேண்டும்.
மூன்றாவதாக, கோபம், எரிச்சல், குறைகூறுதல் உட்பட பல்வேறு ‘ஜென்ம சுபாவங்கள்’ என்று அழைக்கப்படும் பிறவிக்குணங்களில் (1 கொரி.2;14) இருந்து விலக உறுதி அளிக்க வேண்டும்.
இந்த 3 வகையான பாவங்களிலும் இருந்து விலக முன்வர முடிவு செய்வதே, அதாவது மனந்திரும்புவதே ஆன்மிக வாழ்க்கையில் நுழைவதற்கான முதல்படியாக இருக்கிறது. இதில் ஒன்று குறைந்தாலும் மனந்திரும்புதலில் முழுமை இருக்காது. பிற்காலத்தில் மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
இறைப்பணிக்கு ஏசு வருவதற்கு முன்பே மனிதர்களுக்கு வந்த முதல் அழைப்பு மனந்திரும்புவதற்காகத்தான். யோவான் ஸ்நானன் மூலம் அந்த அழைப்பை இறைவன் விடுத்தார்.
‘மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், பாதைகளை செவ்வை பண்ணுங்கள்’ என்றெல்லாம் அவன் அழைப்பு விடுத்தான் (மத்.3).
அதாவது, ஏசு என்ற இறைமகன் வருகிறார். அவர் உன்னிடத்தில் வர வேண்டும் என்றாலும், அல்லது நீ அவரிடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும், மேற்கூறப்பட்ட 3 நிலைகளிலும் இருந்து மனந்திரும்புதல் என்ற ஒரே செயல்தான், இருவருக்கும் இடையே வழியை ஆயத்தம் செய்து கொடுக்கும். அப்படி, கடவுள் (கடந்து உள்ளே வருபவர்) உனது உள்ளத்துக்குள் வந்த பிறகு, உனது ஆத்துமா, பரலோக ராஜ்யத்தில் உள்ளதுபோல செழித்துவிடும் (உலக செழிப்பு வேறு, பரலோக செழிப்பு வேறு). மனந்திரும்பிவிட்டால், அந்த செழிப்பு மிக அருகில் வந்துவிடும் என்பதையே அந்த வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பரலோக ராஜ்யத்தின் நிலை என்ன என்று கேட்டால், முதலில் அங்கு பாவம் கிடையாது. எனவே அங்கு தண்டனை, நிம்மதி இழப்பு போன்ற பாவத்தின் பிரதிபலனான துன்பங்கள் கிடையாது. உண்மையான மனந்திரும்புதலை அடைந்தால், உலகத்தில் வாழும் வாழ்க்கையிலேயே அதுபோன்ற ஒரு நிம்மதியான வாழ்வை (உலக செழிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும்) அடையலாம்.
இந்த உலகத்தில் ஒரு ராஜ்யத்தை ஒரு அரசன் அமைக்கும்போது, வெளியில் இருந்து செயல்படும் எதிரிகளின் நெருக்கடி, உள்ளே இருந்துகொண்டே செயல்படும் விரோதிகளின் போராட்டம் என பன்முனைத் தாக்குதலை எதிர்கொண்டாக வேண்டும். அது போலத்தான் பரலோக ராஜ்யத்தை பக்தனுக்குள் இறைவன் அமைக்கும்போதும் இதே போராட்டம் உண்டு.
வெளியில் இருந்து நெருக்கடி கொடுக்கும் பொருளாசை, இச்சை போன்ற பாவங்கள்; உள்ளே இருந்துகொண்டு பாவங்களைச் செய்யத்தூண்டும் ஜென்ம சுபாவங்கள் என பல முனைகளில் இருந்து தாக்கும் பாவங்களால் கறைபட்டு விடாதபடி, எதிர்த்து போராடியே இறையரசை உள்ளத்தில் அமைக்க முடியும்.
சந்தர்ப்பங்களின்போது, அநியாய ஆசைக்கும், சுபாவத்துக்கும் உட்படாமல், அதைவிட்டு விலகுவதற்கு முழு மனதோடு பக்தன் போராடினால், அப்போது அவனுக்குத் துணையாக இறைவன் வந்து, பலத்தைத் தந்து, அந்த பாவத்தை ஜெயிக்கச் செய்வார். இப்படி பாவங்களை துரத்தியடித்து வெற்றிபெற்றவனே இதயத்தில் பரலோக ராஜ்யம் என்ற இறையரசு அமையப்பெற்றவனாகிறான்.
இப்படிப்பட்ட இறையரசு அமையப்பெற்றவன், எல்லா நிலையிலும் அமைதியாகவும், தன்னைச் சார்ந்தவர்களிடத்தில் எல்லா நிலைகளிலும் சாந்தத்தை பிரதிபலிப்பவனாகவுமே இருப்பான். நாம் எதை பிரதிபலிக்கிறோம்?
Next Story






