search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வில்லங்கமான சொத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்
    X

    வில்லங்கமான சொத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்

    • அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது.
    • சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

    சுய ஜாதகத்தில் செவ்வாய்க்கு ராகு/ கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். அல்லது மூலப் பத்திரம், ஈசி இவற்றின் மூலம்வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள்.

    அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தம் இல்லாத சொத்தை போலிப் பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாற்றுவது அல்லது புறம் போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள்.

    அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது. என்றாலும் இன்றும் பல போலி பத்திர வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஜாதகத்தில் சூரியன் + ராகு சம்பந்தம் இருப்பவர்களின் சொத்து கோவில், சர்ச், மசூதி போன்றவற்றின் அருகில் இருக்கும். அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.

    சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஒரையில் 21 பேருக்கு இட்லியுடன் எள் சட்னி தண்ணீருடன் தானம் தரவும். (48 வாரம்) அல்லது செவ்வாய் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×