என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
அடமான சொத்தை மீட்க பரிகாரம்
- நல்ல உத்தியோகத்தில் உள்ள பலர் கடன் பெற்றே சொத்து வாங்குகிறார்கள்.
- புதன் ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு கடன் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும்.
பல வங்கிகள் நிலையான நிரந்தரமான வருமானம் உள்ளவர்களுக்கு சொத்து வாங்க கடன் உதவி வழங்குகிறது. அதனால் நல்ல உத்தியோகத்தில் உள்ள பலர் கடன் பெற்றே சொத்து வாங்குகிறார்கள். சிலர் அவசர தேவைக்கு வீடு, நிலம், தோட்டங்களை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர்.
சுய ஜாதகத்தில் ஆறு மற்றும் நான்காம் பாவகத்திற்கு சம்பந்தம் இருப்பவர்களே பெரும்பாலும் அசலும், வட்டியும் கட்டி சொத்துக்களை கடனுக்காக இழக்கும் சூழ்நிலையும் உருவாகுகிறது. புதன் ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு கடன் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். எளிதில் தீராத மற்றும் தீர்க்க முடியாத சொத்து அடமான கடனை தந்து மனிதனை வாழ்நாள் கடனாளியாகவே வாழ வைக்கிறது.
இந்த கிரக சம்பந்தம் இருப்பவர்கள் கடனால் ஏற்படும் துக்கத்தை எளிதில் மறக்க முடியாத பாதிப்பையும் தருகிறது. இது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருப்பவர்கள் சுய ஜாதக அமைப்பு அறிந்து சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டும். இவர்கள் செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரையான எமகண்ட நேரத்தில் 48 வாரம் விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை அணிவித்து 9 தேங்காய் எண்ணெய் தீபம் இட வேண்டும்.
சொத்துக் கடனால் வங்கியால் சட்டச் சிக்கலை சந்திப்பவர்கள் பிரச்சினை தீரும் வரை தினமும் மாலை 4.30 மணி மதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட்டு வர பொருளாதாரம் உயரும். சட்டச் சிக்கல் தீரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்