என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
பக்தர்களின் மனக்குறைகளை போக்கும் மாகாளியம்மன் கோவில்
- இந்த கோவில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- கிராம தெய்வமாக விளங்குகிறது மாகாளியம்மன் ஆலயம்.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் கிராமம், 5-வது வார்டுக்குட்பட்ட கூலிபாளையத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பழமையான கோவிலாகவும், மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் உள்ளது.
வேண்டி வரும் பக்தர்களின் குறைகளை போக்கும் வல்ல தெய்வமாக விளங்கும் மாகாளியம்மனின் அருளை பக்தர்கள் பெறவும், அம்மனின் பிரசித்தியை உலகம் அறிந்து கொள்ளவும், கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
உலகில் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் எந்நாட்டிலும் பொன் நாடாகவும், நமது கொங்குநாட்டின் சிறந்த பகுதியாகவும் ஸ்ரீபுரி என்னும் மஹாலட்சுமி வாசம் செய்கின்ற தொழில் நகரமாம் திருப்பூர் நொய்யல் நதியின் வடபால் அமைந்துள்ள திவ்யமான கூலிபாளையம் எனும் பகுதியில் 130 ஆண்டுகளுக்கும் பழமையான தன்னை நாடிவரும் பக்தர்களின் மனக்குறைகள் நீங்கிடவும், வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருள்பாலிக்கும் கிராம தெய்வமாக விளங்குகிறது மாகாளியம்மன் ஆலயம்.
இந்த ஆலயத்தில் புதிதாக கல்ஹார திருப்பணிகள் செய்வித்து, துவார சக்திகள் ராகு, கேது, குதிரை, சிலா உருவ திருமேணிகள் அமைக்கப்பட்டு தை மாதம் 12-ம் நாள் அதாவது இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விநாயகர், மாகாளியம்மனுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் பக்தகோடி பெருமக்கள் கலந்து கொண்டு, மாகாளியம்மனை வணங்கி, இம்மையிலும், மறுமையிலும் நீங்காத செல்வம் பெற கோவில் திருப்பணி குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்