என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித உபகார அன்னை ஆலய திருவிழா - திரளானோர் பங்கேற்பு
Byமாலை மலர்25 May 2018 3:24 AM GMT (Updated: 25 May 2018 3:24 AM GMT)
காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா நடந்தது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை, திருப்பலியும், மாலையில் மறையுரை நற்கருணை ஆசீரும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
8-ம் திருநாளன்று காலை திருப்பலியில் சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவில் நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று இரவு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு தேர் பவனி நடந்தது.
10-ம் திருநாளான நேற்று காலை தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று 6.30 மணிக்கு ஆலய வளாகத்தை தேர் வந்தடைந்தது. தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பொது அசனம் நடக்கிறது.
8-ம் திருநாளன்று காலை திருப்பலியில் சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவில் நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று இரவு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு தேர் பவனி நடந்தது.
10-ம் திருநாளான நேற்று காலை தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று 6.30 மணிக்கு ஆலய வளாகத்தை தேர் வந்தடைந்தது. தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பொது அசனம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X