என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்8 Jan 2021 4:42 AM GMT (Updated: 8 Jan 2021 4:42 AM GMT)
புதுக்கடை அருகே இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
புதுக்கடை அருகே இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. விழாவில் அருட்பணியாளர் ஜாண் மைக்கிள்ராஜ் தலைமை தாங்குகிறார். தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
வருகிற 16-ந் தேதி நடைபெறும் திருப்பலியில் வேங்கோடு பங்குதந்தை ஆன்டனி கோமஸ் தலைமை தாங்குகிறார். திருவிழாவின் இறுதி நாளான 17-ந் தேதி காலை 8.30 மணிக்கு வளனூர் பங்குதந்தை காட்வின் செல்வ ஜஸ்டஸ் தலைைமயில் திருவிழா திருப்பலியும், தொடர்ந்து 11 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது. மாலையில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆண்டனி ஜெயக்கொடி தலைைமயில் பங்குமக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X