search icon
என் மலர்tooltip icon

    ஜோதிடம்

    மேஷம்

    மார்ச் 26 முதல் மே 2 வரை

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் மாலை வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக பள்ளி விடப்பட்டது. ஆனால் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர்.

    அதன் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜை, டெஸ்க், பெஞ்சுகளை தரையில் போட்டும், காலால் எட்டி உடைத்தனர். இதைக்கண்ட ஆசிரியர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீசார் பள்ளி வளாகத்துக்குள் வந்தனர்.

    இதைக்கண்ட பிளஸ்-2 மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பிளஸ்-2 மாணவர்கள் டெஸ்க், பெஞ்சுகளை உடைக்கும் காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் 10 மாணவர்களை மே 4ந்தேதி வரை இடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    மேஷம்

    மிஸ்டிக்கு இன்று நல்ல நாள்

    அதன் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜை, டெஸ்க், பெஞ்சுகளை தரையில் போட்டும், காலால் எட்டி உடைத்தனர். இதைக்கண்ட ஆசிரியர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீசார் பள்ளி வளாகத்துக்குள் வந்தனர்.

    மேஷம்

    மார்ச் 28 முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை

    திருப்பங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முக்கிய முடிவு களை எடுக்க நல்ல நேரம். 5-ம் அதிபதி சூரியன் 12-ல் மறைவு பெற்றதால் தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.


    வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக் கும். தொழிலில் போட்டி, பொறாமை மிகுதியாகும். பணவரவுகள் திருப்தியாக இருக்கும். சுமாரான நிலையில் இருப்பவர்கள் கூட படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையை அடையக் கூடிய சந்தர்ப்பம், சூழ்நிலை அமையும். பெயர், புகழ் அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். விலகிச் சென்ற குடும்ப உறவுகள் தவறுகளை உணர்ந்து மீண்டும் உங்களிடம் வருவார்கள்.

    மேஷம்

    மார்ச் 28: விருந்தாளிகள் வருகை தருவார்கள்

    மேச ராசி அன்பர்களே, இன்று உங்களது வீடுகளுக்கு விருந்தாளிகள் வருவார்கள். உங்களுக்கு இன்று வருமானத்திற்குரிய நாள்

    மேஷம்

    23 மார்ச் : யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியமொன்றில் திடீரெனச் செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்று எடுத்த காரியம் வெற்றியடையும்

    மேஷம்

    கடகம்

    நன்றாக அமையும்

    மேஷம்

    ராகுகேது பெயர்ச்சி பலன்கள் : மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மூலம் சாயாகிரகங்களான ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.

    1.9.2020 முதல் 20.3.2022 வரை

    மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மூலம் சாயாகிரகங்களான ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.

    ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச் செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் 2, 8-ம் இடங்கள் சாதகமற்ற பலனை தரும் இடங்களாக ஜோதிட மூலநூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.

    அதே நேரத்தில் தற்போது ராகு மாற இருக்கும் ரிஷப வீடு அவருக்கு மிகவும் பிடித்த ஒரு சுபரின் வீடு என்பதால் ரிஷபத்தில் அமரும் ராகு நன்மைகளை மட்டுமே செய்வார் எனும் விதிப்படி உங்களுக்கு அந்த பாவகத்தின் தன்மைகளான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் நல்லவைகளை செய்வார்.

    இன்னொரு கிரகமான கேது 8-மிடத்திற்கு மாறினாலும் அது உங்கள் ராசிநாதனின் இன்னொரு வீடு என்பதால், இருக்கும் வீட்டின் அதிபதியின் பலன்களை சர்ப்பக் கிரகங்கள் செய்யும் என்ற விதிப்படி உங்கள் ராசிநாதனான செவ்வாயின் பலன்களை மட்டுமே கேது எடுத்து செய்வார்.

    எனவே 8-ம் இடத்தில் அமரும் கேதுவால் கெடுதல்கள் எதுவும் நடக்குமோ என்றும் பயப்படத் தேவையில்லை. அதிலும் எட்டாமிடம் தூர இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்தப் பெயர்ச்சியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாடுகள், தூர இடங்கள் மூலமான வரவுகள் இருக்கும்.

    அதே நேரத்தில் 3, 6, 10, 11 ஆகிய உபசய ஸ்தானங்களை தவிர்த்து வேறு இடங்களில் அமரும் ராகு-கேதுக்கள் அந்த பாவகத்தை கெடுத்துத்தான் நன்மைகளை செய்வார்கள் என்ற விதிப்படி 2-ம் வீட்டில் அமரும் ராகுவால் இந்தப் பெயர்ச்சியின் முதல் ஆறு மாதங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கும்.

    எனவே எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் அவசரப்பட்டு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இது போன்ற காலகட்டங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியோ, அறிமுகம் இல்லாத நபர்களிடமோ, அனுபவம் இல்லாத கம்பெனிகளிடமோ பணத்தை போட வேண்டாம்.

    அதிக வட்டி தருவதாக சொல்லும் கம்பெனிகளில் பணம் போடுவது, அதிக வட்டி தருவதாக சொல்லும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது போன்ற செயல்களை செய்ய சொல்லி ராகு தூண்டுவார் என்பதால் பேராசை பெரும் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு பண விஷயத்தில் மன அடக்கத்துடன் இருந்து கொண்டால் இந்தப் பெயர்ச்சி எந்தவித பாதிப்புகளையும் உங்களுக்கு தராது.

    அதேநேரத்தில் 8-ம் இடத்தில் அமரப் போகும் விருச்சிக கேது எதிர்பாராத அதிர்ஷ்டம், தனலாபம், பெரியதொகை ஒன்று கிடைப்பது போன்ற விஷயங்களை செய்வார் என்பதால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏதேனும் ஒரு விஷயம் மூலமாக உங்களுக்கு நல்ல தனலாபம் கிடைக்கும்.

    ரியல் எஸ்டேட் போன்றவைகளில் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீடியேட்டர் போன்றவர்களுக்கும் கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.

    எட்டாமிடம் விருச்சிகமாகி அங்கே கேது அமர்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், ஒரு பெரிய தொகை திடீரென கிடைத்தல், உறவினர் சொத்து கிடைத்தல், வெளிநாட்டு நன்மை போன்ற பலன்கள் நடந்து ராகுவினால் ஏற்படும் சாதகமற்ற பலன்கள் சரிக்கட்டப்படும் என்பது உறுதி.

    இந்தப் பெயர்ச்சியினால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் மூலம் உங்களுக்கு வேலைப்பளு அதிகம் வரும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பும், லாபமும் திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அதிகமான வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்.

    அஷ்டம கேதுவால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற வேலை அமையவும் வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வெளிநாடு செல்வீர்கள்.

    பரிகாரங்கள்

    ஒரு கருப்புநிற விதவைப் பெண்மணி அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு கருப்புநிற ஆடை, நான்கு கிலோ கருப்பு உளுந்து, ஒரு தோல் பை அல்லது முற்றிலும் தோலினால் ஆன செருப்பு ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தானம் கொடுங்கள்.

    ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

    (செல்: 8870 99 8888)

    மேஷம்

    2022 குருப்பெயர்ச்சி பலன்கள் : வீரமான மேஷராசியினரே.. இதுவரை ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் இனி

    வீரமான மேஷராசியினரே.. இதுவரை ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் இனி பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்குச் செல்கிறார். சனி பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். இரண்டாமிடத்தில் ராகுவும் எட்டாமிடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    மேஷ ராசிக்கு குரு ஒன்பது மற்றும் பனிரென்டாம் அதிபதி. அதாவது பாக்கியாதிபதி, விரயாதிபதி. லாப ஸ்தானத்தில் குரு சஞ்சாரம் செய்வது சுபித்துச் சொல்லக்கடிய பலன். ஆனால் விரையாதிபதியாகி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பது சுபம் அல்ல. மேலும் லாப ஸ்தானமே பாதகஸ்தானமாக இருப்பதால் சாதகமும், பாதகமும் கலந்த பலனே உண்டு. குரு நின்ற இடத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் மத்திமப்பட்டாலும் பார்வை பதியும் இடங்களான மூன்று, ஐந்து, ஏழாம் இடங்கள் மூலம் ஏற்றமான பலன்கள் உண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

    லாப குருவின் பலன்கள்: பாக்கியாதிபதி உப ஜெய ஸ்தானத்தில் அமர்வதால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் அனைத்துவிதமான அதிர்ஷ்டங்களும் தேடி வரும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். மனக் குழப்பம் விலகி நிம்மதியும் மகிழ்சியும் அதிகரிக்கும். மனதை வாட்டிய அனைத்துப் பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக தீரும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

    தந்தையின் ஆசியும், ஆஸ்தியும் கிடைக்கும். தந்தை எழுதும் உயில் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். தடையாக இருந்த மூத்த சகோதரர் விட்டுக் கொடுப்பார். உடன் பிறந்த சகோதர, சகோதரி வகையில் ஒத்துழைப்பும் சகாயமும் உண்டாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு பேரன், பேத்தி கிடைக்கும்.

    வேலை பளு அதிகம் இருந்தாலும் உழைத்த வருமானத்தைத் பார்த்த உடன் தெம்பு வரும். நிரந்தர வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். கொரோனாவால் வேலை இழந்த வர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும். சிலருக்கு கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்களிடையே நல்லிணக்கம் நீடிக்கும். அரசாங்க வேலையில் மெமோ வாங்கியவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.

    தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி ஏற்படும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

    தொழிலதிபர்களுக்கு அரசின் மானியம் மற்றும் உதவி கிடைக்கும்.அதன் மூலம் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். தொழில், பங்குச் சந்தை என வருமானம் வரும் வழியை கணக்கிட முடியாது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். பழைய கூட்டாளிகளிடமிருந்த மனக்கசப்பு மாறும்.

    நல்ல பணப்புழக்கம் ஏற்படும். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். கடன் தொல்லை குறைய ஆரம்பிக்கும். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் மகிழ்ச்சி தரும்.

    குறுகிய காலத்தில் எதிர்பார்க்காத பல மாற்றமும், முன்னேற்றமும் தேடி வரும். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடம்பர வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி வீட்டை விருப்பம் போல் அழகுபடுத்துவீர்கள்.

    விரயாதிபதியாகி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் 2.3.2022 முதல் 13.4.2021 வரை சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கிடைத்த ஆதாயம், சலுகைகள், முன்னேற்றம் தடைபடும். எதிர்பாராத இழப்புகள் துயரத்தில் ஆழ்த்தும். அண்டை அயலாருடன் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மன சஞ்சலத்தை மிகுதிப்படுத்தும். தந்தை வெளிநாடு செல்வார்.

    வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு மதம் மாறும் எண்ணம் மேலோங்கும். சுய ஜாதகத்தில் எட்டு, பனிரென்டாம் இடத்துடன் சம்பந்தம் பெறும் தசை, புத்தி அசுபத் தன்மையுடன் நடப்பவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கலாம். கைகால், மூட்டு வலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். கண் பார்வைக் குறைபாடு, புறை வளர்தல் போன்ற பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.

    கோட்சாரத்தில் எட்டாமிடத்தில் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் கேதுவால் எதிர்பாராத புதிய கோர்ட், கேஸ் வம்பு வழக்கு உருவாகலாம். வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் பற்றிய சிந்தனை பய உணர்வு இருக்கும்.

    வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமாக திடீர் தனலாபம், உயில் சொத்து கிடைக்கும். லாப ஸ்தானத்தில் நின்று குரு கொடுக்கும் பலன்களை எட்டாமிட கேது தட்டிப் பறிக்க முயன்றாலும் வெற்றி உங்களுக்கே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    ஐந்தாம் பார்வை பலன்கள்: உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை இருப்பதால் சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். புகழ், அந்தஸ்தை, உயர்த்தக்கூடிய கவுரவப் பதவிகள் தேடிவரும். இதுவரை திருமணம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கும் திருமண ஆசை வரும். மேஷ ராசி குழந்தைகளுக்கு இளைய சகோதரம் பிறக்கும். நிலையான வேலையில்லாத இளைய சகோதரத்திற்கு நிரந்தர வேலை கிடைக்கும், திருமணம் நடக்கும்.

    தகவல் தொடர்பு, பத்திரிக்கை மற்றும் ஐடி துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் உண்டு. அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும்.வெகு சிலருக்கு மாமனார் மூலம் தொழில் விருத்தி திடீர் அதிர்ஷ்டம் உண்டு. ஞாபக சக்தி அதிகரிக்கும். சொத்துப் பத்திரம், உயில் பத்திரம், ஜாமீன் பிரச்சனை, போன்றவற்றில் இருந்த சர்ச்சைகள் அகலும்.கண் மறைவாக இருந்த தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும்.

    அடகு வைத்த நகைகள் மீண்டு வரும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை நவீன வசதிகளுடன் மாற்றி கட்டுவீர்கள். காது, மூக்கு தொண்டையில் இருந்த குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். வெகு நாட்களாக இழுபறியாக இருந்த நீதிமன்ற வழக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக முடியும்.

    ஏழாம் பார்வை பலன்: குருவின் ஏழாம் பார்வை ஐந்தாம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

    இதுவரை ஆழ்மனதில் இருந்த நிறைவேறாத நியாயமான ஆசைகள் நிறைவேறும். திட்டங்கள் வெற்றியடையும். வீட்டில் பிள்ளைகளுக்கு திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை அடைவீர்கள். இளம் தம்பதிகளுக்கு புத்திர பிராப்த்தி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு அரசியலில் மிகப் பெரிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். பதவியுடன் பெரும் பணமும் கிடைக்கும். தேர்தல் காலத்தில் கொடுத்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதியால் பொதுமக்களின் அதிருப்தியையும் வம்பு வழக்கையும் சந்திக்க நேரும்.

    பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். குல, இஷ்ட தெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். சிலருக்கு மத போதனையில் ஆர்வம் பிறக்கும். வெகு சிலர் நல்ல மடத்தில் போய் சந்தியாசியாக செட்டில் ஆகிவிடுவார்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் ஏற்படும். மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்ணையும் பாராட்டையும் பெறுவீர்கள்.பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஆலோசனையும் புத்துணர்வு தரும் விதமாக இருக்கும்.வேற்று மொழியை பிரதானமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

    கல்லூரி மற்றும் முதுகலை பட்டப் படிப்பு, ஆராய்ச்சி கல்வி படிப்பவர்களுக்கு சாதகமான காலம். கலைத்துறையினருக்கு விரும்பிய வாய்ப்புகள் தேடி வரும்.

    ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை ஏழாம் இடத்தில் பதிகிறது. சனியின் பார்வையும் ஏழாம் இடத்திற்கு இருப்பதையும் மறக்க கூடாது. 2ல் ராகு 8ல் கேது இருப்பதால் திருமணத் தடை ஏற்படும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். வேற்று மொழி பேசும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

    குடும்பத்தை விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், சம்பந்திகள் வகையில் சந்தோஷமும், சகாயமும் ஏற்படும். கமிஷன் ஏஜென்சி, டிராவல்ஸ், ஷேர் டிரேட், வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் நிறுவனங்கள், வங்கிகள் ஏற்றம் பெறும்.

    இல் வாழ்க்கை இனிமையாகும். தம்பதிகளிடையே நிலவிய கருத்து வேறுபாடு குறையும். வேலை இல்லாமல் இருந்த வாழ்க்கை துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு அல்லது வெளி மாநிலம் செல்ல நேரும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டில் காரிய சித்தி கிடைக்கும். பல தலைமுறையாக தீர்க்கப்படாத பித்ருக்கள் தோஷத்தை சுய ஜாதக வலிமை பார்த்து தில ஹோமம் செய்து சரி செய்ய ஏற்ற நேரமாகும்.

    பெண்கள்: பிறந்த மற்றும் புகுந்த வீட்டின் ஆதரவு மகிழ்சியை தரும். நீண்ட நாள் சுய தொழில் கனவு பலிதாமாகும்.எதிர்பார்த்த பிறந்த வீட்டு சொத்து வந்து சேரும். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். அடமானப் பொருட்கள் மீண்டு வரும். கணவர் தங்க ஆபரணங்கள் மற்றும் அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பார்.

    கணவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆக இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினரின் வயதிற்கும், தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப அபரிமிதமான சுபபலன்கள் உண்டு.

    பரிகாரம்: வீடு மற்றும் தொழில் நிறுவனத்தில் குல தெய்வத்தின் படம் வைத்து வழிபட வெற்றி வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வியாழக்கிழமை பகல் 12 &- 1 வரையான சனி ஒரையில் சிவனடியார்களுக்கு இயன்ற உணவு தானம் செய்து வரவும். அதே நேரத்தில் அந்தணர்களுக்கு தானியங்கள் மற்றும் வஸ்திர தானம் தர மேன்மை உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள்: மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி!!

    ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

    மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி!

    மேஷ ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். இதனால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனியும் சேருவதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகின்றது. எனவே சனியால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்க, குருவின் அனுகூலமும் கைகொடுக்கும்.

    தொழிலில் பணவரவு கூடும்

    டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு உண்டு. எனவே தொழிலில் லாபத்தை அள்ளிக்கொடுப்பர். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.

    சனியின் பார்வை பலன்கள்

    உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி பூமி, சுகம், தாய், கல்வி, வியாபாரம், களத்திரம், பயணம், விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் 4-ம் இடத்தில், சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடிவரும். ஏற்கனவே பேசி கைவிடப்பட்ட வரன்கள், மீண்டும் தேடிவரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களோடு மனம் விட்டுப் பேசி சில பிரச்சினைகளுக்கு நல்ல முடிவெடுப்பீர்கள். சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங் கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.

    சனியின் பாதசாரப் பலன்கள்

    27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். சூரியன் 5-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவரது சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பொதுவாழ்வில் புகழ்கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். எனவே இக்காலத்தில் இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு.

    27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் போது, ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்

    சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். லாபமும் கிடைக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். உறவினர்கள் பகை உருவாகலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ஜென்ம குருவாக வருவதால் இடமாற்றங்களும், ஊர்மாற்றங்களும் ஏற்படலாம்.

    ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

    21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியாகும்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அதன்படி உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.

    வெற்றிக்குரிய வழிபாடு

    சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்குரிய 'கருநிறக் காகம் ஏறி..' என்ற சனி கவசப் பாடலைப் பாடி வழிபடுங்கள். அதோடு ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து அருகம்புல் மாலையும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    மேஷம்

    பிலவ ஆண்டு பலன் :

    பொருளாதார நிலை உயரும்

    (அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

    வளர்ச்சி தரும் வழிபாடு

    சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகப்பெருமானை வழிபடுங்கள். குறிப்பாக யோகபலம் பெற்ற நாளில், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வழிபாட்டை முறையாக செய்து வந்தால் முன்னேற்றம் கூடும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

    மேஷ ராசி நேயர்களே!

    பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பெருமைகளைக் குவிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்தில் சுக்ரன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்று இருக்கின்றார். 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே இந்த ஆண்டு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டு மக்கள் செல்வாக்கை பெறப்போகிறீர்கள்.

    புத்தாண்டின் தொடக்கத்தில் கிரகங்கள் நிலைபெற்றிருக்கும் இடம் மற்றும் அவை பலமாக இருக்கின்றனவா? என்பதை முதலில் அறிந்து செயல்படுவது நல்லது. சுய ஜாதகம் பலம் பெற்றிருக்குமேயானால் கோட்சார ரீதியாக வரும் குறுக்கீடுகள் எதுவும் பாதிக்காது. நடைபெறும் திசாபுத்தி பலம் இழந்து இருக்குமேயானால் மனக்கசப்புகளும், மாற்றங்களும் வந்துசேரும். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள், யோகபலம் பெற்ற நாளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். இந்த அடிப்படையில் உங்கள் ராசியில் சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். தொழில் ஸ்தானத்தில் சொந்த வீட்டில் சனிபகவான் பலம்பெற்றிருக்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதார நிலையை உயர்த்தும்.

    2-ல் ராகு இருப்பதால் வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டி, குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. இயல்பான வாழ்க்கையில் சில குறுக்கீடுகள் வரலாம். அதற்கு அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதே காரணம். எனவே, கணவன்-மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். ஆரோக்கியத் தொல்லைகள் இடையிடையே வந்து கொண்டே இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் அதில் இருந்து விடுபட இயலும்.

    குருவின் வக்ர இயக்கம்

    புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெறுகின்றார். எனவே, இந்த காலகட்டங்களில் நிதானமும், பொறுமையும் அதிகம் தேவைப்படும். எதிர்மறை சிந்தனைகள் அடிக்கடி வந்து அலைமோதும். அதைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வரவழைத்துக் கொள்ளுங்கள். பிடிவாத குணத்தால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வருமானப் பற்றாக்குறையால், சேமிப்புகள் கரையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் அல்லது இடமாற்றங்கள் கைநழுவிச் செல்லலாம்.

    குருப்பெயா்ச்சி காலம்

    ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால், வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே, வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். தெளிவு பிறக்கும். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், மனையில் மங்கல ஓசை கேட்கும். வாசல்வரை வந்து கைவிட்டுப் போன வரன்கள், மீண்டும் வந்து கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். வீடு கட்டும் முயற்சி, வெளிநாட்டு அனுகூலம், வாகன சேர்க்கை போன்றவை உருவாகும். 14-4-2022 அன்று குரு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாக விளங்கும் குரு, விரய ஸ்தானத்திலேயே பலம் பெறுவதால் வரவைக் காட்டிலும் செலவு கூடும். சுப விரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம்.

    ராகு-கேது பெயர்ச்சி காலம்

    21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஜென்ம ராகுவும், சப்தம கேதுவுமாக விளங்குவதால், மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். எதையும் துணிந்து செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு வரலாம். ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடுமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகும்.

    சனியின் வக்ர காலம்

    12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி என்பதால், இக்காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. சூடுபிடித்த வியாபாரத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது.

    கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

    14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் -சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் எதையும் துணிந்து செய்ய இயலாது. அனைவருமே கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. நோய் தொற்று, இயற்கை சீற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். உங்களைப் பொறுத்தவரை ராசிநாதனாக செவ்வாய் இருப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். 'செலவு அதிகரிக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    பெண்களுக்கான பலன்கள்

    இந்தப் புத்தாண்டு உங்களுக்கு யோக வாய்ப்புகளை அள்ளித் தரும். ஆனால் தேக நலனில் கவனம் அவசியம். குரு பார்வையால் கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். தாய், தந்தை மற்றும் சகோதரர்களின் ஆதரவோடு இல்லறத்தை நல்லறமாக அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படலாம். சனியின் வக்ர காலத்தில் விழிப்புணர்ச்சி தேவை. செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும்.

    மேஷம்

    2022 ஆண்டு பலன் : தைரியம் நிறைந்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    காலெண்டர் இயர் : 2022


    தைரியம் நிறைந்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் குரு மற்றும் சனியின் சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.

    உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுத்தால் வருடத்தின் எல்லா நாட்களும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே இருக்கும். இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களை பார்க்கலாம்.

    குருவின் சஞ்சார பலன்:- ஏப்ரல் 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மிக யோகமான காலம். உங்களின் எண்ணங்கள் , திட்டங்கள் நிறைவேறும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த /எதிர்பாராத பெரும் தொகை கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும்.

    வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவு மிகுதியால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.

    ஏப்ரல் 13-ல் குரு விரய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பித்துச் சொல்லும் பலன் அல்ல. 12 -ம் இடம் விரய ஸ்தானம் என்பதால் செலவுகளும் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். வரவிற்கு மீறிய செலவு உண்டாகும். சொத்துக்கள் கை நழுவிப் போகலாம். பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம் அல்லது முதியோர் இல்லம் செல்லலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள்.

    சனியின் சஞ்சார பலன்:- தொழில் ஸ்தான அதிபதி சனி 10-ல் ஆட்சிபலம் பெற்று இருக்கிறார்.தொழிலில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும்.

    பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்பம் மகிழ்சியாக இருக்கும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித் தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி போடுவீர்கள்.

    26-2-2022 முதல் 6-4-2022 வரை இந்த காலகட்டத்தில் செவ்வாய் சனியுடன் இணைகிறார். ஏற்றுமதி, இறக்குமதி தொடர் பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதி கரிக்கும். உங்களின் ராசி அதிபதி செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வும் நேரும். உடலில் இடது கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். பயணங்கள் அதிகரிக்கும். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு, எதிர்மறை சிந்தனை கள், எல்லாவற்றிலும் சாதகமற்ற சூழ்நிலை, விபத்துகள் என மன உளைச்சலே மிஞ்சும்.

    சிலருக்கு உடல் நலம் பாதிப்பால் மருத்துவமனைக்கு சென்று சில நாட்கள் தங்கி சிகிச்சை செய்ய நேரலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும். முறையான திட்டமின்மையால் உங்களின் செயல்பாடுகள் உங்களை பதம் பார்க்கும். வெகு நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு மன உளைச்சல் தரும். ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும்.தந்தையின் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    ராகு/கேது சஞ்சார பலன்:- ஏப்ரல் 12 வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். இக்கால கட்டத்தில் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் மாற்றிப் பேசி மன குழப்பத்துடன் வாழ்வார்கள். பணத்தாசை அதிகரிக்கும். வேற்று மொழி பேசுபவரால் குடும்பத்தில் நிம்மதி போகும். நேர்வழி, குறுக்குவழி என பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தில் காலதாமதம் ஏற்படும்.

    நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனக்குறைவால் பிரச்சனைகளை தானே தேடிக் கொள்வார்கள். சிலரின் வாரிசுகள் குடும்பத்தை விட்டு பிரிவார்கள். திருமண வாழ்க்கையில் நெருடல், மன வேதனை, களத்திரத்துடன் பிரச்சனை இருக்கும். தவறான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மன வேதனை தரும் மறு விவாகம் ஏற்படும். எனவே மேஷ ராசியினர் பேச்சில் சிந்தனையில் கவனத்துடன் இருக்க வேண்டும். 8-ல் உள்ள கேதுவால் தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். பொய்யான வதந்திகளால் பெயர் கெடும். அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் தோன்றலாம்.

    12-4-2022-ல் ராகு ராசிக்கும் கேது 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உருவாகும். 7-ம் இடத்திற்கு சனி பார்வையும் இருப்பதால் திருமண வாய்ப்புகள் தள்ளிப்போகும். கணவன், மனைவிக்கு சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

    ஜனன ஜாதகரீதியான தசாபுத்தி சாதகமற்றவர்களுக்கு விவாகரத்து வரை செல்லும். பல கூட்டுக் குடும்பம் பிரியும். சில பிள்ளைகள் தவறான திருமணத்தால் குடும்பத்தை விட்டு பிரிவார்கள் . உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும். தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.

    திருமணம்:- சூரிய, சந்திர, செவ்வாய் தசை நடப்பவர்களைத் தவிர பிறருக்கு கோட்சார ராகு /கேதுவால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. கோட்சார குருவின் 9ம் பார்வை ராசிக்கு ஏழாம் இடமான துலாத்திற்குப் கிடைப்பதால் தோஷ நிவர்த்தி பெற்று ஏப்ரல் 2022-க்குள் திருமணம் முடியும்.

    பெண்கள்:பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். பணிபுரியும் இடத்தில் பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.மன சஞ்சலத்தால் வீட்டு விஷயத்தை பிற ஆண்களிடம் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கக் கூடாது. பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

    விவசாயிகள்:-ஏப்ரல் 13--க்குப் பிறகு புதிய மாற்றங்கள் உண்டாகும்.விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். உபரியான விளைச்சல் ஏற்படும். விளை பொருட் களுக்கு சந்தையில் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுவர். வாழ்க்கை தரம் உயரும். விளை நிலம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.

    உத்தியோகஸ்தர்கள்:- வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு சம்பள உயர்வு என்று அனைத்து வித நன்மைகளும் தேடிவரும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இது வரை நிரந்தர வேலை இல்லாத வர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.

    முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்:- தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். இதுவரையில் யோசிக் காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள்.உற்பத்தி தொழிலில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் ஏப்ரலுக்கு மேல் சிலர் குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வம் மிகும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய பங்கு தாரர்களைத் தவிர்ப்பது நலம்.

    அரசியல்வாதிகள்:- 7-ம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் ஏப்ரல் 2022-க்கு மேல் சிலர் கட்சி மாறலாம். கட்சி கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சாதகமற்று இருப்பதால் கூட்டாளிகளால் வீண் பழி அல்லது வம்பு, வழக்கு உருவாகலாம். வாக்கில் நிதானம் தேவை. கட்சிப் பணிக்காக அதிக உழைப்பையும், பொருளையும் விரயம் செய்யும் நேரம். பெயர், புகழை தங்க வைக்க கடுமையாக பாடுபட நேரும். சந்தர்ப்பவாதியாக செயல்படாமல் மக்களுக்காக உழைத்தால் நன்மைகள் மிகும்.

    மாணவர்கள்:- மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். பள்ளி, கல்லூரி கலை நிகழ்சிகளில் கலந்து பரிசுகளும், பதக்கங்களும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதுத்தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும்.

    அஸ்வினி:- வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டாலும் ஏதேனும் ஒருவகையில் செலவைச் சரி செய்ய தேவையான பணம் வந்து சேரும். கிருஷ்ணரை வழிபட மன நிறைவு ஏற்படும்.

    பரணி:- நண்பர்களால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவரை வழிபட சிறப்பான யோகம் தானாகவே அமையும்.

    கிருத்திகை 1-ம் பாதம்:- நீண்டகாலமாக தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் தானாகவே அமையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×