என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருப்புடைமருதூர் ஓவியங்களும் மரச் சிற்பங்களும்
    X

    திருப்புடைமருதூர் ஓவியங்களும் மரச் சிற்பங்களும்

    • இப்படங்களை கண்ணால் பார்ப்பதன் வாயிலாகவே திருப்புடைமருதூர் ஓவியங்களின் சிறப்பை புரிந்து கொள்ள முடியும்.
    • இந்த ஓவியங்கள் வாயிலாக அவை வரையப்பட்ட காலத்தைய சமுதாயத்தை அறிந்து கொள்ளலாம்.

    திருப்புடைமருதூர் கோவிலில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களையும் செதுக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களையும் பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தினர் தொழில்நுட்ப நேர்த்தியுடன் 1980 மற்றும், 1985 ல் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.

    பின் 2008ல் டிஜிட்டல் புகைப்பட கருவியின் துணையுடன் புகைப் படங்கள் எடுத்துள்ளனர். இவ்வாறு இவர்கள் எடுத்துள்ள வண்ணப் புகைப்படங்களின் எண்ணிக்கை 2200 ஆகும்.

    இப்படங்களை கண்ணால் பார்ப்பதன் வாயிலாகவே திருப்புடைமருதூர் ஓவியங்களின் சிறப்பை புரிந்து கொள்ள முடியும்.

    இந்த ஓவியங்கள் வாயிலாக அவை வரையப்பட்ட காலத்தைய சமுதாயத்தை அறிந்து கொள்ளலாம்.

    கலை வரலாற்றில் ஓவியர்கள் சிற்பிகள் ஆகியோர் தம் காலப் பண்பாட்டையே தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர்.

    புராணம், சமயம் தொடர்பான படைப்புகளும் இப்போக்கிற்கு விதிவிலக்கல்ல.

    இதே வழிமுறையில்தான் திருப்புடைமருதூர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்த ஓவியர்கள் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு அவற்றில் இடம்பெற்றுள்ளன.

    திருஞானசம்பந்தர் பல்லக்கில் வரும் காட்சியில் இடம்பெறும் பல்லக்கு, ஓவியர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பல்லக்கின் அமைப்பைக் கொண்டுள்ளது.

    அவரை வரவேற்கும் அரசு அதிகாரிகள் நாயக்கர்கால அதிகாரிகளைப் போன்று ஆடை உடுத்தியுள்ளார்கள்.

    Next Story
    ×