என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்
- காயம்பட்ட சுயம்பு மூர்த்தியென்பதால் அவரின் காயம் ஆற்றிடும் பொருட்டு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது.
- ருத்ராட்ச மேனியுடை கோமதி அம்பாள் வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள்.
தாமிரபரணியாற்றங்கரையில் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே அமைந்துள்ள சிவாலயம் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்.
இவ்வாலயத்தின் புராண பெயர் புடார்க்கினியீஸ்வரர்.
காயம்பட்ட சுயம்பு மூர்த்தியென்பதால் அவரின் காயம் ஆற்றிடும் பொருட்டு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது.
ருத்ராட்ச மேனியுடை கோமதி அம்பாள் வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள்.
"நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ" எனக்கேட்ட கருவூர் சித்தரின் வாக்கினைச் சாய்ந்து கேட்டதால் சுயம்புலிங்கமான நாறும்பூநாதர் சற்றே சாய்ந்தே காணப்படுகிறார்.
தேடிவரும் பக்தர்களின் வேண்டுதல்களைச் செவி சாய்த்தருள்கிறார்.
Next Story






