என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருமண வரம் அருளும் தூம கேது விநாயகர்
- தூமம் என்றால் ராகு, ராகு கேது ஆகிய இரண்டு வடிவமும் இணைந்து விளங்குகிறார் தூம கேது விநாயகர்.
- இவரை வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் போன்ற நாட்களில் தரிசிக்கலாம்.
108 திருப்பதிகளில் சென்னையை அடுத்த திருநீர்மலையும் ஒன்று.
இங்குள்ள குளத்தின் பெயர் மணிகர்ணிகாதடாகம். இந்த மணிகர்ணிகா தடாகத்தின் கிழக்குக் கரையில் தூம கேது விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
தூமம் என்றால் ராகு, ராகு கேது ஆகிய இரண்டு வடிவமும் இணைந்து விளங்குகிறார் தூம கேது விநாயகர்.
இவரை வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் போன்ற நாட்களில் தரிசிக்கலாம்.
திருமணமாகாத பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் போது, அவர்களது ராகு, கேது தோஷம் நீங்கி திருமணம் நடந்து விடுவதாக கூறுகிறார்கள்.
விநாயகர், சதுர்த்தியன்று இத்தலத்தில் சிறப்பு யாகம் நடைபெறும். குழந்தைப் பாக்கியம் வேண்டுவோருக்கு கணபதி யாகம் நடத்தப்படுகிறது.
வலம்புரிச்சங்கு கொண்டு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மற்ற விசேஷ நாட்களிலும் வலம்புரிச்சங்கு தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Next Story






