என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருமாலின் மார்பை அலங்கரிக்கும் துளசி
- துளசிக்கு “திருத்துழாய்” என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு.
- துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.
துளசி என்றால் "தன்னிகரில்லாதவள்" என்று அர்த்தமாகும்.
துளசி என்பது ஒரு வகை செடியின் இலையாகும். இதை துள+சி என்பார்கள். இதற்கு "ஒப்பில்லாத செடி" என்று பொருள்.
துளசிக்கு "திருத்துழாய்" என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு.
துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.
மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது.
இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.
மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
Next Story






