என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் மற்றும் மரகத கணபதி
    X

    சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் மற்றும் மரகத கணபதி

    • மரகத கல்லில் பச்சை பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை அளிக்கும் அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார்.
    • இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும்.

    சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக 'வருக...வருக...' எனக் கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது.

    ஐம்பொறிகளையும் ஐம்பூதங்களையும் அடக்கு, அடக்கு என ராஜகோபுரம் நம்மிடம் கூறுவது போல் உள்ளது.

    உயரமான கொடிமரம், கொடி மரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல மரகதப் பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது.

    இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகில் வேறு எங்கும் இல்லை என உறுதியாக கூறலாம்.

    கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகத கல்லில் சூரியனார் ஒளி வீசிக்கொண்டு இருக்குக, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்டு கம்பீரமான ராஜகணபதி மரகத கல்லில் பச்சை பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை அளிக்கும் அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார்.

    பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், ஆதிமூலவர் (முன் இருந்த பாலசுப்பிரமணிய சுவாமியின் விக்ரகம்) நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் புடை சூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

    இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும்.

    Next Story
    ×