என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பிரதோஷ நாளில் பிரகாரத்தை மும்முறை வலம் வரும் ஈசன்
- பிரதோஷ நாளன்று ரிஷப வாகனத்தில் ஈஸ்வரர் எழுந்தருளி பிரகாரத்தை மும்முறை வலம் வருவார்.
- அப்பொழுது நாமும் அவர் பின்னால் வலம் வர முக்தி கிடைக்கும்.
பிரதோஷ நாள் அமாவாசையிலிருந்து 13 வது நாளன்று வரும். அதை திரயோகதசி நாள் என்பர்.
இதே போல் பவுர்ணமியிலிருந்து 13 வது நாளன்றும் வரும். இதையும் திரயோதசி நாள் என்பர்.
அமாவாசையிலிருந்து 13வது நாளாக வரும் திரயோதசி திதியை வளர்பிறை பிரதோஷம் என்றும், பவுர்ணமியிலிருந்து 13 வது நாளாக வரும் திரயோதசி திதியை "தேய் பிறை பிரதோஷம்" என்றும் அழைப்பர்.
பிரதோஷ நாளன்று ரிஷப வாகனத்தில் ஈஸ்வரர் எழுந்தருளி பிரகாரத்தை மும்முறை வலம் வருவார்.
அப்பொழுது நாமும் அவர் பின்னால் வலம் வர முக்தி கிடைக்கும்.
ஏனெனில் ஈஸ்வரர் பிரகாரத்தை ஒரு சுற்று வரும்போது வேத பாராயணம் ஓதப்படுகின்றது.
இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம் ஓதப்படுகின்றது.
மூன்றாவது சுற்றில் நாதங்கள் முழங்கப்படுகின்றன.
Next Story






