என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு!
    X

    நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு!

    • அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் உண்டாகும்.
    • தொழிலில் லாபம் பெருகும். மதுரை மீனாட்சியம்மன் நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.

    அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் உண்டாகும்.

    தொழிலில் லாபம் பெருகும். மதுரை மீனாட்சியம்மன் நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.

    சத்தியன் என்னும் தவமுனிவர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் அச்சோதீர்த்தம் என்னும் குளத்தில் நீராடி, சிவனை தியானத்து வந்தார்.

    அங்கொரு நாரை ஒன்று வசித்து வந்தது. சத்திய முனிவரும், மற்ற தவசீலர்களும் மதுரையின் பெருமையை பேசிக் கொண்டிருந்தனர்.

    அதைக்கேட்ட நாரைக்கும் சிவபக்தி உண்டானது. மதுரை கோவிலுக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி சிவனை வழிபட்டது.

    பதினாறாம் நாள் நாரைக்கு காட்சியளித்த சிவன், நாரைக்கு முக்தியளித்தார்.

    இக்கோலத்தை தரிசித்தால் சிவனருளால் பிறவாத நிலை உண்டாகும்.

    நைவேத்யம்: புளியோதரை

    தூவும் மலர்கள்: செந்தாமரை, ரோஜா

    Next Story
    ×