என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இந்தியாவிலேயே சிவன் பார்வதிக்காக கட்டப்பட்ட மிக பெரிய கோவில்
    X

    இந்தியாவிலேயே சிவன் பார்வதிக்காக கட்டப்பட்ட மிக பெரிய கோவில்

    • இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோவிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது.
    • இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

    திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும்.

    இங்கு உள்ள கோவிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னி வடிவதில் காட்சியளிக்கிறார்.

    மேலும் இக்கோவில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோவில் என்று வரலாறு கூறுகிறது.

    மற்றும் ஒரு சிவன் பக்தரான பல்லாலா இக்கோவிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.

    இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.

    சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்.

    ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார்.

    இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர்.

    இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார்.

    இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார்.

    இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோவில் இல்லை.

    இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோவிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது.

    இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

    ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.

    Next Story
    ×