என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அக்னி நட்சத்திர நாளில் செய்யும் அபிஷேகங்களின் பலன்கள்
    X

    அக்னி நட்சத்திர நாளில் செய்யும் அபிஷேகங்களின் பலன்கள்

    • உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.
    • அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

    இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    அருகம்புல் தண்ணீரால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

    நல்லெண்ணை அபிஷேகத்தினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    பசும்பால் அபிஷேகத்தினால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.

    தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம் கிடைக்கும்.

    பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

    சர்க்கரை அபிஷேகம் துக்கத்தை போக்கும்.

    புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் லாபம் வரும்.

    இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும்.

    உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

    அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

    வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

    அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.

    திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

    பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.

    நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும்.

    மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

    மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

    எலுமிச்ச பழ தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆத்மஞானம் உண்டாகும்.

    பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் மன தைரியம் பெறலாம்.

    தயிர் அபிஷேகத்துக்கு உதவினால் குடும்பத்தில் செல்வம் பெருகும்.

    இளநீர் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் சுகமான வாழ்வு அமையும்.

    அக்கினி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியான ஒரு நாளில் அண்ணாமலையாருக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம்.

    Next Story
    ×