என் மலர்
முன்னோட்டம்

ஐஸ்வர்யா முருகன் முன்னோட்டம்
ஐஸ்வர்யா முருகன்
ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஐஸ்வர்யா முருகன் படத்தின் முன்னோட்டம்.
ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’. இப்படத்தை ஆர்.பன்னீர் செல்வம் இயக்கி இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘கருப்பன்' படத்திற்கு பிறகு, முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் ஒரு கதை பண்ணலாம் என்று யோசிக்கும் போதுதான் ரொம்ப நாள் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த இந்த ஆணவக் கொலை “ஐஸ்வர்யா முருகன்” கதையை உருவாக்கினேன்.
அதன் பின்னணியில் படம் பண்ண நினைத்த போது நிறைய தகவல்கள் கிடைத்தது. மனதை கல்லாக்கிக்க வேண்டியது இருந்தது. அப்படிப்பட்ட நிஜங்களின் பிம்பம் தான் இது. காதலையும், வலியையும், பிரிவையும் பல படங்களில் சொல்லிட்டாங்க. ஆனால் இங்கே ஒரு காதல், காதலர்களின் குடும்பங்களைச் எப்படி சிதைத்து.. துயரங்களை உண்டாக்கியது என்ன.. இப்படி பல நிஜங்களை சொல்ற படம் தான் “ஐஸ்வர்யா முருகன்”. வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கூட கொண்டுப் போக வைக்கும்” என்றார்.
இப்படத்தில் ஹீரோவாக அருண் பன்னீர்செல்வம் அறிமுகமாகிறார். கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் தெய்வேந்திரன், ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத், குண்டுகார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, நாகேந்திரன்னு புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவையும், கணேஷ் ராகவேந்திரா இசை பணியையும், ஜான் ஆபிரகாம் எடிட்டிங் பணியையும் செய்கிறார்கள்.
Next Story






