என் மலர்
சினிமா

கிழக்கு சந்து கதவு எண்-108
கருப்பாய் ஆண்டாள் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கிழக்கு சந்து கதவு எண்-108’. இது மர்மம் நிறைந்த திகில் கதையாக உருவாகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக சுபாஷ், கதாநாயகியாக யாஷிகா நடிக்கிறார்கள்.
கருப்பாய் ஆண்டாள் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கிழக்கு சந்து கதவு எண்-108’. இது மர்மம் நிறைந்த திகில் கதையாக உருவாகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக சுபாஷ், கதாநாயகியாக யாஷிகா நடிக்கிறார்கள். ‘சிட்டிசன்’ பட இயக்குனர் சரவண சுப்பையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பாலா, பிரசாத், வந்தனா ராணி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை-எஸ்.வேலன், ஒளிப்பதிவு-வேதா, தயாரிப்பு-ஏ.செந்தில், இயக்கம்-ஏ.செந்தில் ஆனந்த்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது... “தற்போது தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கவுரவ கொலைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இது போன்ற கொலைகள், தவறுகள் நடக்காமல் தடுக்கும் விதத்தில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்தால் தமிழகத்தில் நடைபெறும் கொலைகள், தவறுகள் பெரும்பாலும் நடைபெறாமல் நின்று விடும். அப்படி ஒரு கோணத்தில் இந்த கதை சொல்லப்பட்டிருக்கிறது.
‘சிட்டிசன்’ பட இயக்குனர் சரவண சுப்பையா இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய அவர், ‘நான் இதுவரை இயக்குனர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். இந்த படம் வெளியான பிறகு நல்ல நடிகர் என்பதும் தெரிய வரும் என்று தெரிவித்தார். அவரது நடிப்பு மட்டுமல்ல நிச்சயம் இது சமுதாயத்துக்கு நல்லது செய்யும் படமாக இருக்கும் என்றார்.
இசை-எஸ்.வேலன், ஒளிப்பதிவு-வேதா, தயாரிப்பு-ஏ.செந்தில், இயக்கம்-ஏ.செந்தில் ஆனந்த்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது... “தற்போது தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கவுரவ கொலைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இது போன்ற கொலைகள், தவறுகள் நடக்காமல் தடுக்கும் விதத்தில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்தால் தமிழகத்தில் நடைபெறும் கொலைகள், தவறுகள் பெரும்பாலும் நடைபெறாமல் நின்று விடும். அப்படி ஒரு கோணத்தில் இந்த கதை சொல்லப்பட்டிருக்கிறது.
‘சிட்டிசன்’ பட இயக்குனர் சரவண சுப்பையா இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய அவர், ‘நான் இதுவரை இயக்குனர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். இந்த படம் வெளியான பிறகு நல்ல நடிகர் என்பதும் தெரிய வரும் என்று தெரிவித்தார். அவரது நடிப்பு மட்டுமல்ல நிச்சயம் இது சமுதாயத்துக்கு நல்லது செய்யும் படமாக இருக்கும் என்றார்.
Next Story






