என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்னிடம் இருக்கும் பிரச்சனையே இதுதான்- மனம் திறந்த கயாடு லோஹர்
    X

    என்னிடம் இருக்கும் பிரச்சனையே இதுதான்- மனம் திறந்த கயாடு லோஹர்

    • நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் ஆள்.
    • எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுகிறேன்.

    'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய கயாடு லோஹர், இளம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.

    அதர்வா ஜோடியாக 'இதயம் முரளி, ஜி.வி.பிரகாஷ் உடன் 'இம்மார்டல்' படங்களில் நடிக்கும் கயாடு லோஹர், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், 'உங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது?" என்று கேட்கப்பட்டது.

    அதற்கு "நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் ஆள். அதுதான் என் பிரச்சினையாகவே நினைக்கிறேன். அதனால் எளிதில் மனம் உடைகிறேன். எனவே அந்த போக்கை மாற்றிக்கொண்டு இன்னும் உறுதி மிக்கவளாய், எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுகிறேன்". என்று அவர் பதிலளித்தார்.

    Next Story
    ×