search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பா.இரஞ்சித் லிங்குசாமியிடம் சேர்த்து விட சொன்னார்.. என்கிட்ட மாட்டிக்கிட்டார் - இயக்குனர் வெங்கட் பிரபு
    X

    வெங்கட் பிரபு

    பா.இரஞ்சித் லிங்குசாமியிடம் சேர்த்து விட சொன்னார்.. என்கிட்ட மாட்டிக்கிட்டார் - இயக்குனர் வெங்கட் பிரபு

    • முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் உள்ளிட்ட பலர் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசியதாவது, 2007 காலகட்டத்திலிருந்து ரஞ்சித்தை எனக்கு தெரியும். ஒரு டாக்குமெண்ட்ரிக்கு ஸ்டோரிபோர்ட் செய்யத்தான் வந்தார். நான் படம் செய்த போது நானே அவரை அழைத்தேன்.

    பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு

    அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்து விட சொன்னார். பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார். ரஞ்சித் படங்களை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள் இத்தனை விசயங்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார். அவரது ஒவ்வொரு படமும் ஆச்சர்யம் தரும். இந்தப்பட டிரெய்லரே மிரட்டிவிட்டது. ஹாலிவுட் படம் போல் உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.



    Next Story
    ×