search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் களம் இறங்கும் எஸ்.ஜே. சூர்யா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
    X

    எஸ்.ஜே. சூர்யா

    மீண்டும் களம் இறங்கும் எஸ்.ஜே. சூர்யா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

    • வாலி, குஷி, நியூ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா.
    • தற்போது இவர் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.

    வாலி - குஷி


    இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'கில்லர்' என்ற பெயரில் உருவாகவுள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி அதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    எஸ்.ஜே. சூர்யா

    இவர் இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு இசை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×