search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி! மனமுடைந்த சின்மயி
    X

    சின்மயி

    நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி! மனமுடைந்த சின்மயி

    • சின்மயி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற வதந்தி பரவி வந்தது.
    • அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் சின்மயி பதிவிட்டிருந்தார்.

    தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

    ராகுல் ரவீந்திரன் - சின்மயி

    சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியுள்ளதை அடுத்து அண்மையில் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

    சமீபத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சின்மயி கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடவில்லை என்பதால் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற வதந்தி பரவி பலரும் விவாதிக்க தொடங்கினர்.

    அதன்பின்னர் இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக சின்மயி தனது இணைய பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன் இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்தார்.

    இந்நிலையில் இவரின் இந்த பதிவில் கமெண்ட் செய்த ஒரு நபர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டார். இதற்க கமெண்ட்டிற்கு பதிலளிக்கும் விதமாக சின்மயி காட்டமாக பதிலளித்துள்ளார். அதில், இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன். இதற்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் இதனை பதிவிட்டுள்ளார்.நான் எனது கர்ப்பக்கால புகைப்படத்தை வெளியிடாததற்கு உண்மையான காரணம் இருக்கிறது. எனக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால்தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. பலாத்கார ஆதரவாளர், என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று என்னிடம் கூறுகிறார்.

    சின்மயி

    நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வீண் வன்மத்தை பெண்கள் மேல் திணிக்கும் நபர்களுக்கு சவுக்கு அடியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மீடூ சர்ச்சையில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×