search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என் வீட்டில் வெள்ளம் வந்திருச்சி.. சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோ..
    X

    சந்தோஷ் நாராயணன்

    என் வீட்டில் வெள்ளம் வந்திருச்சி.. சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோ..

    • தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளிலும் வீடுகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் 2 அடி முதல் 3 அடிவரை சாலையோரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


    சந்தோஷ் நாராயணன்

    இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் வீட்டின் முன் 2 அடி அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா" எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.



    Next Story
    ×