என் மலர்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படக்குழு
புரோமோஷனுக்காக பொன்னியின் செல்வன் படக்குழு செல்லும் அடுத்த முக்கிய நகரம்
- 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படக்குழு
மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு கோவை, டெல்லி, கொச்சின் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
பொன்னியின் செல்வன்
இந்நிலையில் கொச்சினை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளனர். அதன்படி வருகிற 23ம் தேதி 5.30 மணிக்கு நொவோட்டல் ஹைதராபாத் கன்வென்ஷன் சென்டரில் (Novotel Hyderabad Convention Centre) நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
The Cholas are coming to Hyderabad!
— Madras Talkies (@MadrasTalkies_) April 21, 2023
On April 23rd at 5:30 PM?Novotel Hyderabad Convention Centre.#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions… pic.twitter.com/eZ52fXjthT






