search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இசையை விட தூய்மையானது எது? பார்த்திபன் கொடுத்த அப்டேட்
    X

    இசையை விட தூய்மையானது எது? பார்த்திபன் கொடுத்த அப்டேட்

    • இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.


    இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான் ஐந்து பாடல்களை உருவாக்கியுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "வா'வென

    வாய் பிளந்து

    வரவேற்று

    வாய் நனைய முத்தமிட்டு

    இறுதிவரை இருக்க விரும்பி

    இறுக அணைத்தாலும்…

    திட்டமிட்டபடி

    சட்டென விட்டு

    வி ல கி

    சென்றுவிடும்

    சென்ற வினாடிகள் !!!

    தும்பைப் பூவின் மீது

    தூய்மையான

    பனித்துளி படர்ந்து

    தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட

    மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்

    பூப்பதுமுண்டு!

    இசையை விட தூய்மையானது எது?

    சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்

    வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.

    இம்மான் …. இமான்!

    அபார ஞானமும்

    அயராத உழைப்புமாய்

    அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார்.இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.

    மைனா'வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை.அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.

    இனி…

    இனிமை

    இசையாய்…

    Ok!

    Tittle ?

    அறிவிப்போம் விரைவில்!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×