search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கீர்த்தி மற்றும் பகத் நினைத்தால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த உதயநிதி..
    X


    உதயநிதி ஸ்டாலின்

    கீர்த்தி மற்றும் பகத் நினைத்தால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த உதயநிதி..

    • தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.
    • இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.

    தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன் படக்குழு

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை மாமன்னன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின் "இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் கீர்த்தி சுரேஷ் மற்றும், பகத் பாசில் இருவரும் தேதி கொடுத்தால்தான் நடக்கும். அதை பற்றி கொஞ்சம் யோசிங்க. மாரி செல்வராஜ் சார் ஒன் மோர் காட்சிகளுக்கு சாரி. நன்றி மாமன்னன் படக்குழு" என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×