search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லவ் டுடே கதையை மலையாக நம்பி ஏறினேன்.. வெற்றி கிடைத்தது-  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
    X

    பிரதீப் ரங்கநாதன்

    லவ் டுடே கதையை மலையாக நம்பி ஏறினேன்.. வெற்றி கிடைத்தது- இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'.
    • இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபற்றது.

    ஜெயம் ரவி நடித்து 2019-ல் வெளியான 'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்து உள்ளது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பங்கேற்று பேசும்போது, "லவ் டுடே படத்தில் கதாநாயகனாக நடிக்க நான் விரும்பியதும் பலர் தயங்கினர். ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம் என்றனர். ஹீரோவாக எதற்கு நடிக்கிறாய் என்றும் பேசினர். படம் தோற்று கீழே விழுந்தால் திரும்ப எழுவது கஷ்டம் என்பதும் நிறைய பேர் கேலி செய்வார்கள் என்பதும் எனக்கும் புரிந்தது.

    பிரதீப் ரங்கநாதன்

    ஆனாலும் மலை ஏற மற்ற உபகரணங்களை விட மலை முக்கியம் என்று கருதினேன். லவ் டுடே கதையை மலையாக நம்பி அதில் ஏறினேன். வெற்றி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் லவ் டுடே வசூல் ஈட்டி உள்ளது. அறிமுக நாயகனாக நான் இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்து 'லவ் டுடே' படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி. என்றைக்கும் இதை மறக்க மாட்டேன். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் மலை ஏறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்றார்.

    Next Story
    ×