search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.. சர்ச்சை கருத்தால் நடிகர் சேத்தன் குமார் கைது
    X

    சேத்தன் குமார்

    இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.. சர்ச்சை கருத்தால் நடிகர் சேத்தன் குமார் கைது

    • கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சேத்தன் குமார்.
    • இவர் இந்துத்துவா குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சேத்தன் குமார் இந்துத்துவா குறித்து பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர் தனது சமூக வலைதளத்தில், " இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது. ராவணனை வீழ்த்தி ராமன் அயோத்தியா திரும்பியதில் இருந்து இந்திய நாடு என்பது தொடங்குகிறது என்ற கருத்து ஒரு பொய். 1992: பாபர் மசூதியே ராமரின் பிறப்பிடம் என கூறியது ஒரு பொய். 2023: உரிகவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோர் திப்புவை கொன்றவர்கள் என்றதும் ஒரு பொய்" என தெரிவித்துள்ளார்.


    சேத்தன் குமார்

    மேலும், அதில், இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த முடியும். சமத்துவம் என்பதே உண்மை என சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் பெங்களூரு, சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்து உள்ளார். இந்நிலையில், கன்னட நடிகர் சேத்தன் குமாரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×