search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லைக்குகளை குவிக்கும் நடிகை பூர்ணாவின் புதிய புகைப்படம்
    X

    பூர்ணா

    லைக்குகளை குவிக்கும் நடிகை பூர்ணாவின் புதிய புகைப்படம்

    • சில தினங்களுக்கு முன்பு நடிகை பூர்ணா துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


    பூர்ணா

    சில தினங்களுக்கு முன்பு பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது புதிய போட்டோஷுட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள பூர்ணா, "வாழ்க்கையின் மிகப் பெரிய அதிசயம், உங்களுக்குள் உயிர் வளர்வதுதான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.


    Next Story
    ×