search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உலகத்துல என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது.. கெட்டவளும் கிடையாது.. சீறிய பிக்பாஸ் ஜனனி
    X

    பிக்பாஸ் சீசன் 6 

    உலகத்துல என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது.. கெட்டவளும் கிடையாது.. சீறிய பிக்பாஸ் ஜனனி

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சாந்தி வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான புரோமோவில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    பிக்பாஸ் சீசன் 6

    அப்போது ஜனனியின் பொம்மையை போட்டியாளர்கள் எடுக்க தவறவிட்டதால், அவர் கோவத்தில் என் கூட நல்ல மாதிரி பழகுனா எனக்கு கஷ்டமா இருக்கும். என்னை சண்டைக்கு இழுத்தா என்ன மாதிரி கெட்டவ இந்த உலகத்துல பாக்கவ முடியாது. என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது, என்ன மாதிரி கெட்டவளும் கிடையாது என்கிறார். இதனுடன் இந்த இரண்டாவது புரோமோ நிறைவடைகிறது.

    முதல் புரோமோவில் மணிகண்டனின் பொம்மையை போட்டியாளர்கள் எடுக்க தவறிவிட்டதால் அவர் கோபத்தில் கத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×