search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது - நடிகர் விக்ரம் மேலாளர்
    X

    விக்ரம்

    வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது - நடிகர் விக்ரம் மேலாளர்

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம்.
    • இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர். சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த விக்ரம், சிறந்த நடிகருக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    தற்போது "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் விக்ரம் 'ஆதித்ய கரிகாலன்' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


    விக்ரம்

    இதையடுத்து, நடிகர் விக்ரமிற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், நடிகர் விக்ரமின் மேலாளர் சூரிய நாராயணன் கூறியதாவது, "நடிகர் விக்ரம் லேசான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

    அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று மாலை அல்லது நாளை காலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்புவார்" என்று கூறினார்.

    Next Story
    ×