search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருக்கடையூர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற நடிகர் செந்தில் பீமரத சாந்தி திருமண விழா
    X

    செந்தில்

    திருக்கடையூர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற நடிகர் செந்தில் பீமரத சாந்தி திருமண விழா

    • தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில்.
    • இவர் 1984 -ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    80-களில் தமிழ் திரையுலகில் நகைச்சுவைகளில் அசத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் செந்தில். இவரும் கவுண்டமணியும் இணைந்து நடித்துள்ள திரைப்படங்களின் காமெடிகள் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டது. இவர்கள் இருவரின் காமெடிக்கென சினிமாவில் தனி இடம் உண்டு.


    300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள செந்தில், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். இவர் 1984 -ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் செந்திலின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இவர் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


    இதைத்தொடர்ந்து, செந்தில் -கலைச்செல்வி தம்பதியினருக்கு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜை நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடிகர் செந்திலுடன் செல்பி எழுத்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×