search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சமூக வலைத்தளத்தில் பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா மாரிமுத்து? விளக்கமளித்த மகன்
    X

    சமூக வலைத்தளத்தில் பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா மாரிமுத்து? விளக்கமளித்த மகன்

    • ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு படங்களிலும் நடித்துள்ளவர் மாரிமுத்து.
    • சமூக வலைத்தளத்தில் மாரிமுத்து போன்று பதிவிட்டிருப்பது பேசு பொருளாகியது.

    இயக்குனர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரிமுத்து. வசந்த்திடம் ஆசை, ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை மாரிமுத்து செய்திருக்கிறார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால், உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு படங்களிலும் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.



    இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் 18+ கண்டெண்ட்டுகளை போடும் கணக்கு ஒன்றிலிருந்து, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு "Can I call you" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய கணக்கில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரிப்ளையில் "yes" என பதிலளித்து மாரிமுத்துவின் மொபைல் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நம்பர் ட்ரூ காலரில் தேடிப்பார்த்து அது அவரது நம்பர் என உறுதியானதால் ரசிகர்கள் பலரும் அதிரிக்குள்ளானர்.



    இந்நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில், கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த விளக்கத்துக்கு பின்னர் அந்த போலி பதிவு நீக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×