search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தன் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.. நடிகர் ரவி மரியா புகார்..
    X

    ரவி மரியா

    தன் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.. நடிகர் ரவி மரியா புகார்..

    • தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் ரவி மரியா.
    • இவர் ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

    தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த 'ஆசை ஆசையாய்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. தொடர்ந்து இவர் 'மிளகா' படத்தை இயக்கினார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்த 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.மேலும், இவர் காமெடி வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.


    ரவி மரியா

    இந்நிலையில் நடிகர் ரவி மரியா தன் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, "எனது இன்ஸ்டாகிராம் ஐடி போன்று போலியாக ஐடி உருவாக்கி மர்ம நபர் ஒருவர் நான் பணம் கேட்பது போன்று பல நண்பர்களிடம் பணம் கேட்டுள்ளார். அதை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதற்காக காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். தயவு செய்து என்னுடைய போலி கணக்கை பயன்படுத்தி யாராவது பணம் கேட்டால் தயவு செய்து கொடுக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×