என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணநாள் வாழ்த்துகள் கூறிய ஜாய் கிரிசில்டா
    X

    மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணநாள் வாழ்த்துகள் கூறிய ஜாய் கிரிசில்டா

    • டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என்று தெரிவித்து இருந்தார்.
    • ஏமாற்றம் அவளை உடைக்கவில்லை…

    பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையதுதான் என்றும், இதனை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கூறி ஜாய் கிரிசில்டா பதிவிட்டு வந்தார். மேலும் என் மகன், அவன் அப்பா செய்வது போலவே விரல்களை மடக்குகிறான். ஒரே ஜீன். உங்களுக்கு இதை விட வேறென்ன DNA ஆதாரம் வேணும் Mr Husband. சிக்கிட்டீங்க என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜ் பதில் எதுவும் கூறாமல் உள்ளார்.

    இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார் ஜாய் கிரிசில்டா. இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணநாள் வாழ்த்துகள்...

    ஏமாற்றம் அவளை உடைக்கவில்லை…

    அது அவளைக் கடினமானவளாக மாற்றியது…

    "அவளை உடைக்க நினைத்த எல்லாத்துக்கும் ஒரே பதில்…

    அவளோட தைரியம்" என்று கூறியுள்ளார்.

    மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.



    Next Story
    ×