மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்- ஜாய் கிரிசில்டா புகார்

ஜாய் கிரிசில்டா தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்- ஜாய் கிரிசில்டா புகார்
Published on

மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல்துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம்தான். தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். அவரது முதல் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.

மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ஜாய் கிரிசில்டா தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார். மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடைடேய, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்தார்.

இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் கூறியுள்ளார்.

சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com