search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஜினியை சந்தித்த தன்ஷிகா பட ஹீரோ
    X

    ரஜினியை சந்தித்த தன்ஷிகா பட ஹீரோ

    • இப்படம் வருகிற மே 3- ந் தேதி தியேட்டர்களிl 'ரிலீஸ்' செய்யப்படுகிறது.
    • 'புரூப்' படக்குழு சார்பில் கதாநாயகன் ருத்வீர் ரஜினியை நேரில் சந்தித்தார்

    2006 - ம் ஆண்டு வெளியான 'திருடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தார்.

    மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 -ம் ஆண்டு வெளிவந்த 'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார். அதன் பின் துல்கர் சல்மானுடன் 'சோலோ' என்ற படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு 'தி புரூப்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக தன்ஷிகா நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோ- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ராஷிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.




    இப்படத்தில் அசோக், ரித்விகா, இந்திரஜா, ருத்வீர் வரதன், மைம் கோபி, ராஜ சிம்மன், அஷ்மிதா, ஆகியோr நடித்துள்ளனர். படத்துக்கு ஆர்.கே.தீபக் இசையமைத்துள்ளார்.

    இப்படம் வருகிற மே 3- ந் தேதி தியேட்டர்களிl 'ரிலீஸ்' செய்யப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ்,மட்டுமின்றி இந்தி தெலுங்கு மொழிகளிலும் 'டப்' செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட உள்ளது.



    இந்நிலையில் 'புரூப்' படக்குழு சார்பில் கதாநாயகன் ருத்வீர் சென்னையில் ரஜினியை நேரில் சந்தித்தார். அப்போது படம் வெளியீடு குறித்து விசாரித்த ரஜினி படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவரது மகளாக சாய் தன்ஷிகா நடித்து இருந்தார். எனவே ரஜினியுடனான நட்பு காரணமாக அவரை சந்தித்து வாழ்த்து பெற்றதாக 'புரூப்' படக்குழுவினர் தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    Next Story
    ×