என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மேக்னா ராஜ்
    X

    2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மேக்னா ராஜ்

    • மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார்.
    • தற்போது மேக்னா ராஜுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகை மேக்னா ராஜ். இவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    தற்போது மேக்னா ராஜுக்கு ஒரு மகன் இருக்கிறான். இளம்வயதிலேயே கணவரை இழந்த மேக்னா ராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் வலம் வந்தது.

    இந்த நிலையில் 2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை மேக்னா ராஜ் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன்மூலம் அவர் எப்போது இருந்தாலும் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாதான் என முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சில கன்னட படங்களில் நடித்து வரும் மேக்னா ராஜ், மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×