திரைத்துறையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் ரியோ ராஜ்

"ஆண் பாவம் பொல்லாதது" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைத்துறையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் ரியோ ராஜ்
Published on

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ரியோ ராஜ். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் ரியோ ராஜ் நல்ல கதையம்சம் கொண்ட படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இவர் நடிப்பில் வெளியான "ஆண் பாவம் பொல்லாதது" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இவர் மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரியோ ராஜ் திரைத்துறையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். நடிகர் ரியோ ராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு "ரிவர் ரூட் ஸ்டூடியோஸ்" என பெயர் சூட்டியுள்ளார். மேலும், தனது தயாரிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்போடு, தயாரிப்பாளராகும் அறிவிப்பையும் ஒரே வீடியோவாக அவர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி ரியோ ராஜின் ரிவர் ரூட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ரியோவுடன் ஜோ திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் வருண் கே.ஜி. மற்றும் பிரபல யூடியூபர் நிஷாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது முதற்கட்ட அறிவிப்பு வெளயாகி இருக்கும் நிலையில், தொடர்ந்து இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com