என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விண்ணைத் தாண்டி வருவாயா பட காட்சிகள், இசையை பயன்படுத்த ஆரோமலே படக்குழுவுக்கு தடை
    X

    'விண்ணைத் தாண்டி வருவாயா' பட காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு தடை

    • இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
    • படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'ஆரோமலே'. இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து 'ஆரோமலே' திரைப்படம் வெளியாவதற்கான பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.

    இந்த நிலையில், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    'ஆரோமலே' படத்தில் தங்கள் அனுமதி இல்லாமலும், காப்புரிமை சட்டத்தை மீறியும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சி, இசை பயன்படுத்தப்பட்டதாக ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு தடை விதித்தது.

    Next Story
    ×