என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
”வெற்றி படத்திற்கே இந்த நிலைன்னா” - சுரேஷ் காமாட்சி வேதனை
Byமாலை மலர்6 Feb 2022 9:09 AM GMT (Updated: 6 Feb 2022 9:20 AM GMT)
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தின் 75-வது நாள் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தற்போது வெளியாகி 75-வது நாளை கடக்கிறது. இதனிடையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருடைய சமூக வலைத்தளத்தில் சில விஷயங்களை பதிவிட்டிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பது. படம் வெளியாகி 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றி படத்திற்கே இந்த நிலைன்னா மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல.. என்று பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
#maanaadu75dayspic.twitter.com/m6A1Z4XMLF
— sureshkamatchi (@sureshkamatchi) February 5, 2022
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X