search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நீரில் மூழ்கிய நடிகையின் காரை மீட்கும் தீயணைப்பு வீரர்
    X
    நீரில் மூழ்கிய நடிகையின் காரை மீட்கும் தீயணைப்பு வீரர்

    காதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு

    பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் அவரின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது 28) உடன் கோவாவுக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். 

    அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள குட்டையில் மூழ்கியது.

    ஈஸ்வரி தேஷ்பாண்டே
    ஈஸ்வரி தேஷ்பாண்டே

    காரில் இருந்து வெளியே வரமுடியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈஸ்வரி தேஷ்பாண்டேவுக்கும் அவரது காதலனுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததாம். இந்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×