என் மலர்
சினிமா

உதயநிதியை தொடர்ந்து அருள்நிதியை இயக்கும் சீனு ராமசாமி
கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் கிராமத்து கதையில் நடிக்க அருள்நிதி நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார். #ArulnidhiTamizharasu #SeenuRamasamy
கிராம பின்னணியில் உருவான வம்சம் திரைப்படம் மூலம் அருள்நிதி கதாநாயகனாக அறிமுகமானாலும் அவருக்கு கவனம் பெற்றுத் தந்த படங்களான டிமான்டி காலனி, மெளனகுரு ஆகியவை திரில்லர் பாணியில் உருவாகி இருந்தன. வம்சம் போல மண் சார்ந்த கதை அவருக்கு அமையாமல் இருந்த நிலையில் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமியின் அடுத்த படத்தை டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் தான் அருள்நிதி நடிக்க இருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் இணைந்துள்ளார். படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது. #ArulnidhiTamizharasu #SeenuRamasamy
Next Story






